Marikkar
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் அரசியல் நாடகம்! – மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்கிறார் மரிக்கார் எம்.பி

Share

அமைச்சர்கள் பதவி விலகிவிட்டனர் என அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. ஆனால் அமைச்சுகளுக்கான வரப்பிரதாசங்களை அவர்கள் இன்னமும் அனுபவிக்கின்றனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” அமைச்சர்கள் பதவி விலகிவிட்டனர் எனக் கூறப்படுகின்றது. ஆனால் நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றம் வரவில்லை. வாகனங்கள், வீடுகள் மீளப்பெறப்படவில்லை.

அமைச்சுகளுக்கான அரசியல் நியமனங்களும் தொடர்கின்றன. எனவே, பதவி துறப்பு என்பது வெறும் நாடகம். எனவே, இந்த அரசு வீடு செல்லும்வரை மக்கள் போராட வேண்டும்.” – என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,

” பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளிவந்துவிட்டது. இதுகூட தெரியாமல் எதிரணி உறுப்பினர்கள் உளறுகின்றனர்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...