இலங்கை
நாளை 13 மணி நேரம் மின்வெட்டு!
நாட்டில் நாளை வியாழக்கிழமை 13 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள துஎன இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
அனல் மின் நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தால் இலங்கை மின்சார சபையால் இந்த மாதம் 5ஆம் திகதி வரை இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 15 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி நாளை A, B, C, D, E, F ஆகிய பிரிவுகளில் காலை 3 மணி முதல் 6 மணி வரை, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, மாலை 6 மணி முதல் 12 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
G, H, I, J, K, L ஆகிய பிரிவுகளில் காலை 12 மணி முதல் 3 மணி வரை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
P, Q, R, S ஆகிய பிரிவுகளில் காலை 3 மணி முதல் 6 மணி வரை, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, மாலை 6 மணி முதல் 12 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
T, U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 12 மணி முதல் 3 மணி வரை, காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
M, N, O, X, Y, Z ஆகிய பிரிவுகளில் காலை 5.30 முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
You must be logged in to post a comment Login