யானை தாக்கி குடும்பப் பெண் பரிதாப மரணம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானை தாக்கி குடும்பப் பெண் பரிதாப மரணம்!

Share

மன்னார் மாவட்டம், அடம்பன் பகுதியில் யானை தாக்கிப் படுகாயமடைந்திருந்த குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சதனாந்தன் சுதா என்னும் 46 வயது பெண்ணே உயிரிழந்தார்.

கடந்த 13ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் வீட்டுக்கு முன் உள்ள வீதியில் சத்தம் கேட்டது. அதனால் வெளியே வந்த குடும்பத் தலைவர் டோ ச் லைட் அடித்து அவதானித்தார். இதன்போது அவரது மனைவியும் வீட்டு முற்றத்துக்கு வந்தார்.

அப்போது யானை ஒன்று அவர்களது காணிக்குள் நுழைந்து இருவரையும் தாக்க வந்தது. அதனால் கணவர் ஓடி வீட்டுக்குள் நுழைந்தபோதும் மனைவி ஓடி மறைவாக இருந்தார்.

இதன்போது வீட்டுக்கு வெளியே மறைவில் இருந்த பெண்ணை யானை தாக்கியது.

யானை தாக்கிப் படுகாயமடைந்த பெண், மன்னார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், நான்கு நாள்களின் பின் நேற்று முற்பகல் 9 மணியளவில் சிகிச்சை பயனின்றி குடும்பப் பெண் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு அறிக்கையிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64a7f7facdef2 1
இலங்கைசெய்திகள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: பரத் தர்ஷன் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் நடிக்கிறார்!

தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக...

Eggs 848x565 1
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக அளவில் கோழிகள் இறந்ததன் காரணமாக, எதிர்காலத்தில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு...

854660 untitled 2
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிதியுதவி: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள...

images 8
இலங்கைசெய்திகள்

மின் விநியோகம் வழமைக்குத் திரும்ப நடவடிக்கை: ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

அதிதீவிர வானிலையால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை வெகு விரைவில் மீள இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...