யானை தாக்கி குடும்பப் பெண் பரிதாப மரணம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானை தாக்கி குடும்பப் பெண் பரிதாப மரணம்!

Share

மன்னார் மாவட்டம், அடம்பன் பகுதியில் யானை தாக்கிப் படுகாயமடைந்திருந்த குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சதனாந்தன் சுதா என்னும் 46 வயது பெண்ணே உயிரிழந்தார்.

கடந்த 13ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் வீட்டுக்கு முன் உள்ள வீதியில் சத்தம் கேட்டது. அதனால் வெளியே வந்த குடும்பத் தலைவர் டோ ச் லைட் அடித்து அவதானித்தார். இதன்போது அவரது மனைவியும் வீட்டு முற்றத்துக்கு வந்தார்.

அப்போது யானை ஒன்று அவர்களது காணிக்குள் நுழைந்து இருவரையும் தாக்க வந்தது. அதனால் கணவர் ஓடி வீட்டுக்குள் நுழைந்தபோதும் மனைவி ஓடி மறைவாக இருந்தார்.

இதன்போது வீட்டுக்கு வெளியே மறைவில் இருந்த பெண்ணை யானை தாக்கியது.

யானை தாக்கிப் படுகாயமடைந்த பெண், மன்னார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், நான்கு நாள்களின் பின் நேற்று முற்பகல் 9 மணியளவில் சிகிச்சை பயனின்றி குடும்பப் பெண் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு அறிக்கையிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...