PM Modi at Summit for Democracy
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய பிரதமர் பலாலி விமான நிலையம் ஊடாகவே இலங்கைக்கு!

Share

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாகவே இம்முறை இலங்கை வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பிரபல சிங்கள இணையத்தளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரபுக்கள், இராஜதந்திரிகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகவே வருவார்கள்.

எனினும், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிப்பதற்காகவே மோடி அங்கு வருகிறார் எனக் கூறப்படுகின்றது.

நல்லாட்சியின்போது, பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு அப்போதைய கூட்டு எதிரணி கடும் எதிர்ப்பை வெளியிட்டதால் அம்முயற்சி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இம்மாத இறுதியில் மோடியின் இலங்கை பயணம் இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...