PM Modi at Summit for Democracy
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய பிரதமர் பலாலி விமான நிலையம் ஊடாகவே இலங்கைக்கு!

Share

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாகவே இம்முறை இலங்கை வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பிரபல சிங்கள இணையத்தளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரபுக்கள், இராஜதந்திரிகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகவே வருவார்கள்.

எனினும், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிப்பதற்காகவே மோடி அங்கு வருகிறார் எனக் கூறப்படுகின்றது.

நல்லாட்சியின்போது, பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு அப்போதைய கூட்டு எதிரணி கடும் எதிர்ப்பை வெளியிட்டதால் அம்முயற்சி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இம்மாத இறுதியில் மோடியின் இலங்கை பயணம் இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...