nanan
இலங்கைசெய்திகள்

நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு 3 கோடி நிதி!

Share

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் வாழ்வியலை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இந்த இரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட நன்னீர் நிலைகளில் மீன் மற்றும் இறால் குஞ்சுகளை இடும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக 3 கோடி 22 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 லட்சம் 65 ஆயிரம் இறால் குஞ்சுகளும் சுமார் 22 லட்சத்து 81 ஆயிரத்து 314 மீன் குஞ்சுகளும் சுமார் தெரிவு செய்யப்பட்ட 25 நீர்நிலைகளில் இடப்பட்டுள்ளன.

அதேபோல், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, அக்கராயன் உட்பட சுமார் 7 குளங்களிலும் பருவகால நீர்நிலைகளிலுமாக 12 லட்சம் இறால் குஞ்சுகளும் 13 லட்சத்து 89 ஆயிரத்து 570 மீன் குஞ்சுகளும் விடப்பட்டுள்ளன.

எஞ்சிய இறால் மற்றும் மீன் குஞ்சுகள் எதிர்வரும் வாரங்களில் தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 700 குடும்பங்களும் நன்மையடைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...