image 188
இலங்கைசெய்திகள்

பொல்லால் அடித்து கணவர் கொலை! – அவிசாவளையில் பயங்கரம்

Share

அவிசாவளை பகுதியில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவர் உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை –தைகல பகுதியில் நேற்று இரவு இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மதுபோதையில் வருகை தந்த கணவர் நேற்றிரவு மனைவியை தாக்கியுள்ளார். இதனால் மனைவி கணவரை பொல்லால் தாக்கியுள்ளார். இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

இதனையடுத்து மனைவி 8 வயதான மகளை மாமியார் வீட்டில் ஒப்படைத்து விட்டு பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

இளைஞனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கான ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...