இலங்கை
வடமராட்சி கடலில் மீனவர் மாயம்!!
வடமராட்சி கடலில் மீனவர் மாயம்!!
வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடற்பகுதியில் கடலட்டை பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டை பிடிப்பதற்காக கடலில் இறங்கியுள்ளார். குறித்த நேரத்தின் பின் அவருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை இழுத்தபோது அவரைக் காணவில்லை என படகில் இருந்த ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன மீனவரை இரு நாள்களாகத் தேடியும் அவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது்.
புத்தளத்தைச் சேர்ந்த இவர் குடாரப்பு கடற்கரையில் வாடியமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் எனக் கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login