இலங்கைசெய்திகள்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

Share

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுதல் தொடர்பான தீர்மானம் ஒரு வார காலத்துள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் மற்றும் கொரோனா தொற்று காரணமாக நடத்தி முடிக்காமல் போன அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் தாமதம் காரணமாகவே க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமடைகின்றன.

இந்த நிலையில் அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி க.பொ.த. சாதாரணப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் சாத்தியங்கள் குறித்து கல்வி அமைச்சு ஆராய்கின்றது.

எனவே இது தொடர்பில் இறுதித் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அழகியல் பாட செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதால் பிரச்சினைகள் தோன்றும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...