25 683cef4d4a795
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் இரண்டு அதிகாரிகள் கைது

Share

வெலிக்கடை சிறைச்சாலையின் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு அதிகாரிகளிடமிருந்தும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையின் அவசர பதிலளிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரும், சாதாரண பணியில் ஈடுபட்டு வந்த பொறுப்பதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகளிடமிருந்து ஹெரோயின், ஐஸ் போன்ற போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகசீன் சிறைச்சாலை அதிகாரியின் தகவல்களுக்கு அமைய இந்த இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலனறுவை மற்றும் அவிசாவளை பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...