இலங்கை

மன்னாரில் மேலும் இரு பெண்கள் கொரோனாவால் சாவு!

Share
corona death
Share

மன்னார் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு பெண்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

அதன்படி மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆக பதிவாகியுள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத  72  வயதுடைய மூதாட்டி ஒருவரும், இன்று அதிகாலை தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்றுக்கொண்ட 78 வயதுடைய மூதாட்டி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

இதேவேளை இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் ஆயிரத்து 823 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுன. எனவே சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, நானாட்டான் டிலாசார் பாடசாலை, மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மறிச்சிக்கட்டி அல் ஜெசிரா பாடசாலை மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...