image 4606f8a5c0
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கால்வாயில் விழுந்து 14 வயது மாணவன் பலி!

Share

குருணாகலை வஹெர பகுதியில் வீதி அருகே காணப்பட்ட கால்வாயில் விழுந்து 14 வயது மாணவன் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

நாட்டில் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் தொடர் மழை பெய்துவருகின்றது.

இந்நிலையில் குருணாகலை, வஹெர பகுதியில் வீதியோரம் காணப்படும் கால்வாயில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. சிறிய கால்வாயாக இருந்தாலும் வீதி மட்டத்துக்கு நீர் சென்றுள்ளது.

பாடசாலை விட்டு அவ்வீதியூடாக நடந்து சென்ற மாணவன், வாகனமொன்று வந்தவேளை, வீதியோரம் ஒதுங்கியபோதே கால்வாய்க்குள் விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரை தேடும் பணி இடம்பெற்றது. எனினும், அவர் பலியானார்.

முறையற்ற விதத்தில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டதாலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...