6 52
இலங்கைசெய்திகள்

இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பி சென்ற 12 ஆயிரம் இராணுவ வீரர்கள்

Share

இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பி சென்ற முன்னாள் இராணுவ வீரர்கள் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பான தகவல்களை தற்போது வெளியிட்டு வருகின்றது.

கடந்த 10 வருட காலப்பகுதியில் 12 ஆயிரம் இராணுவ வீரர்கள் இராணுவத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் உள்ள நிலையில் அவர்களிலேயே இந்த அளவிலானோர் தப்பி சென்று சுற்றி திரிவதாக கூறப்படுகின்றது.

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்களின் பின்னணியில் இவ்வாறான முன்னாள் இராணுவ வீரர்கள் சிலர் செயற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...