gotabaya rajapaksa with mahinda rajapaksa 2
அரசியல்இலங்கைசெய்திகள்

‘113 இல்லையேல் நாளையே பதவி விலகுவேன்’ – மஹிந்த அதிரடி அறிவிப்பு

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி ஆரம்பித்துள்ளது.

113 உறுப்பினர்களின் ஆதரவை இலகுவில் பெற்றுவிடலாம் என பஸில் தரப்பு கருதினாலும், மேற்படி பிரேரணையில் இன்னும் 100 எம்.பிக்கள்வரைகூட கையொப்பம் இடவில்லை என தெரியவருகின்றது.

நாளைய தினமும் கையொப்பம் திரட்டப்படவுள்ளது. மேற்படி பிரேரணையில் 113 உறுப்பினர்கள் கையொப்பம் இடாவிட்டால், அடுத்த நொடியே தான் பதவி விலகுவார் என ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தற்போது 103 ஆசனங்கள் வரையே காணப்படுகின்றன. எனவே, பதவி துறக்கும் அறிவிப்பை மஹிந்த விடுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

மகாநாயக்க தேரர்கள் சங்க பிரகடனத்தை வெளியிட்டுவிட்டால், அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எனவே, அந்த அறிவிப்புக்கு முன்னர் மஹிந்த விலகக்கூடும் என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....