24 666535e9a7cb1
இலங்கைசெய்திகள்

நாளாந்தம் பதிவாகும் நூற்றுக்கணக்கான டெங்கு நோயாளர்கள்

Share

நாளாந்தம் பதிவாகும் நூற்றுக்கணக்கான டெங்கு நோயாளர்கள்

இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் (NDCU) பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர (Sudath Samaraweera) தெரிவித்துள்ளார்.

தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 25,619 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரம் 9,348 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணம் மாத்திரமின்றி வடமேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் டெங்கு நோய் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கவனத்திற்கொண்டு, டெங்கு பரவும் இடங்களை அழிப்பதற்கு ட்ரோன்கள் மூலம் நுளம்பு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுமென கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பி.கே. புத்திக மகேஷ் (Dr. B.K. Buddhika Mahesh) தெரிவித்துள்ளார்.

மேல்மாகாண டெங்கு கட்டுப்பாட்டுக் குழுவின் ஆலோசனையின் பேரில், விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் இப் பணியை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரியின் 05 பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 06 பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் 08 பிரிவுகளும் வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...