death 1 1024x680 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த முதியவர் மரணம்!

Share

கண்டி புறநகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி, வத்தேகம, உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய மொஹமட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் 5 மணிநேரம் இவர் வரிசையில் நின்றதாகவும், மயங்கி வீழ்ந்தவரை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வரிசையில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

எனினும், வைத்தியசாலையில் சேர்க்க்படும்போது அவர் உயிரிழந்துவிட்டார் என தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

நாட்டில் இவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தி மக்களை வதைக்கும் அரசே, இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என கண்டி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...