IMG 20220317 WA0050
இந்தியாஇலங்கைசெய்திகள்

கைதான இலங்கை மீனவர்கள் தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்கு

Share

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்த இந்திய கடலோர பொலிஸார் தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்திய கடலோர பொலிஸார் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான வஜ்ரா ரோந்து கப்பல் சா்வதேச கடல் பகுதியில் 120 மைல் தொலைவில் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது, இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கையைச் சோ்ந்த ஒரு விசைப்படகில் மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரையும், அவா்களது படகையும் கடலோர பொலிஸார் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட மீனவா்கள் 6 பேரும் புத்தளம் பகுதியைச் சோ்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 6 பேரையும் இந்திய கடலோர பொலிஸார் இன்று மாலை தூத்துக்குடி தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம், மத்திய, மாநில உளவுத்துறை, சுங்கத் துறையினர், மீன்வளத் துறையினர், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மீனவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு 6 பேரையும் நாளை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

IMG 20220317 WA0049

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....