WhatsApp Image 2022 03 17 at 8.37.13 PM
இலங்கைசெய்திகள்

வீதியில் திருத்தகம் – தாம் எந்தப்பாதையால் செல்வது!!

Share

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சண்டிலிப்பாய் – தொட்டிலடி வீதியில் கனரக வாகனத் திருத்தகம் ஒன்றினால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றார்கள்.

இந்த திருத்தகத்தில் பஸ்,லொறி,டிப்பர் போன்ற வாகனங்கள் திருத்தப்படுகின்றது. ஆனால் வீதியில் வைத்து இவை பழுதுபார்க்கப்படுவதால் மக்கள் பாரிய சிரமத்திற்குள்ளாகி வருகின்றார்கள்.

இதற்கு அருகில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி ,சண்டிலிப்பாய் இந்து ஆரம்ப பாடசாலை அமைந்துள்ளது. இப்பாட சாலை மாணவர்கள் உட்பட பல நூற்றுக் கணக்கானோர் அன்றாடம் இவ்வீதியினை பயன்படுத்திவருகிறார்கள்.

இவ்வீதியானது ஒடுங்கிய அகலம் குறைந்த வீதியாக காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தினை மக்கள் எதிர் நோக்கவேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் பிரதேச சபையும் பிரதேச செயலகமும் உடனடி நடவடிக்கை எடுத்து அகற்றி பொருத்தமான இடத்திற்கு மாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Srilankan Airlines
இலங்கை

நிறுத்தப்பட்டது இலங்கை விமான போக்குவரத்து – இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை.

மீண்டும் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான...

manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...