GettyImages 1229777150
அரசியல்இலங்கைசெய்திகள்

ஏப்ரல் 03 போராட்டத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை! – ஜே.வி.பி. அறிவிப்பு

Share

” ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தின் பின்புலம் என்னவென்று தெரியவில்லை, அதனை ஏற்பாடு செய்வது யாரென்றும் தெரியவில்லை. எனவே, இது தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்.” -இவ்வாறு ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

பொருட்களின் விலையேற்றம், வரிசை நிலைமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 03 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வீதியில் இறங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தன்னெழுச்சி போராட்டம் எனக் கூறப்பட்டாலும், இதனை எற்பாடு செய்வது யாரென தெரியவில்லை. இந்நிலையிலேயே ஜே.வி.பி. இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

” மக்களுக்கு போராடும் உரிமை இருக்கின்றது. எனினும், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தலையிட தலைமைத்துவம் வேண்டும்.” எனவும் அக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, இப் போராட்டத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என 11 கட்சிகளின் கூட்டு அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...