17 4
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகளுக்கு அநுர தரப்பு பதிலடி

Share

எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகளுக்கு அநுர தரப்பு பதிலடி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினதும் செலவுத் தொகை ஒரே மாதிரியானவை என எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆளும் தரப்பு பதில் வழங்கியுள்ளது.

உலக உணவுத் திட்டத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்ட 1300 மில்லியன் டொலர்கள் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படுவதால் ஜனாதிபதியின் தொகை ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவு திட்டதின் தொகைக்கு சமமாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர (Lakmali Hemachandra) இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெளிவு படுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் தனிப்பட்ட ஊழியர்களுக்கான செலவு அறுபத்து நான்கு வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஜனாதிபதியின் செலவிற்காக வரவு செலவுத் திட்டத்தில் ரணில் ஒதுக்கிய அதே தொகையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒதுக்கியுள்ளதாக கேகாலை மாவட்ட சபை உறுப்பினர் கபீர் ஹாசிம் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...