IMG 20211224 WA0015
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீடொன்றிலிருந்து பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு!

Share

தியத்தலாவை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை, தியத்தலாவைப் பொலிஸார் (இன்று) 24-12-2021ல் மீட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டுரிமையாளரான ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

தியத்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர ரட்ணாயக்கவிற்கு கிடைத்த ரகசியத் தகவலொன்றினையடுத்து, அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.

அவ்வேளையில், அங்கு சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதியைக் கண்டுபிடித்து, மீட்டனர்.

அவ் வெடிபொருள் பொதியில், ஆர்.பி.ஜி. ரக பயிற்சிக்கான வெடிகுண்டு – 01, 82 மோட்டார் ரக வெட் குண்டு – 01, டி. 56 எபோ ரக குண்டுகள் – 147, எம்.ஐ.எல்.எஸ். ரக கைக்குண்டு – 01, வெற்றுமெகசின் – 02, சன்னப்பெட்டி – 01, புகைக்குண்டு – 01, தலைக்கவசம் – 01, நீர்போத்தல் – 01 ஆகியன அடங்கியிருந்தனவென்று, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர ரட்னாயக்க கூறினார்.

மீட்கப்பட்ட வெடிபொருட்களுடன், வீட்டுரிமையாளரையும், பொலிசார் கைது செய்தனர்.

தியத்தலாவைப் பொலிசார் தொடர்ந்தும், மேற்படி விடயம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Boat 2 1 e1478846009492
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சுற்றுலாத்துறை எழுச்சி: 15 நாட்களில் 1.3 இலட்சம் பயணிகள் வருகை – முதலிடத்தில் இந்தியா!

2026 ஆம் ஆண்டின் ஆரம்பமான முதல் 15 நாட்களுக்குள் 131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை...

25 695216a3788ad
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹20 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள்: கட்டுநாயக்கவில் மோட்டார் மெக்கானிக் கைது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டுச் சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் நபர்...

26 696b34410ecde
இலங்கைசெய்திகள்

துபாய் இஷார வலையமைப்பின் 3 முக்கிய ஏஜெண்டுகள் கைது: கம்பளையில் 20 வயது இளைஞர்கள் போதைப்பொருளுடன் சிக்கினர்!

துபாயில் இருந்து இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் ‘துபாய் இஷார’ என்ற முக்கிய கடத்தல்காரருக்குச்...

images 13 2
செய்திகள்இலங்கை

டித்வா புயல் நிவாரணம்: 3,000 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல் – வாடகை வீடுகளுக்கும் அரசாங்கம் நிதி உதவி!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உதவிக் கொடுப்பனவுகள் மற்றும் வீடுகளைச் சீரமைப்பதற்கான மானியங்கள்...