IMG 20211224 WA0015
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீடொன்றிலிருந்து பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு!

Share

தியத்தலாவை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை, தியத்தலாவைப் பொலிஸார் (இன்று) 24-12-2021ல் மீட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டுரிமையாளரான ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

தியத்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர ரட்ணாயக்கவிற்கு கிடைத்த ரகசியத் தகவலொன்றினையடுத்து, அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.

அவ்வேளையில், அங்கு சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதியைக் கண்டுபிடித்து, மீட்டனர்.

அவ் வெடிபொருள் பொதியில், ஆர்.பி.ஜி. ரக பயிற்சிக்கான வெடிகுண்டு – 01, 82 மோட்டார் ரக வெட் குண்டு – 01, டி. 56 எபோ ரக குண்டுகள் – 147, எம்.ஐ.எல்.எஸ். ரக கைக்குண்டு – 01, வெற்றுமெகசின் – 02, சன்னப்பெட்டி – 01, புகைக்குண்டு – 01, தலைக்கவசம் – 01, நீர்போத்தல் – 01 ஆகியன அடங்கியிருந்தனவென்று, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர ரட்னாயக்க கூறினார்.

மீட்கப்பட்ட வெடிபொருட்களுடன், வீட்டுரிமையாளரையும், பொலிசார் கைது செய்தனர்.

தியத்தலாவைப் பொலிசார் தொடர்ந்தும், மேற்படி விடயம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...