jaffna Protest
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கவனயீர்ப்பில் கொயிலாமனை மக்கள்!!

Share

கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராமசேவகர் பிரிவை எல்லைபடுத்தும் தெருவை, தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்திற்குள்ளால், தங்களுடைய பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் இடுப்பளவு நீரிற்குள்ளால் பாடசாலைக்குச் செல்கின்றனர்.

jaffna Protest 02

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பயண்படுத்திவரும் இவ்வீதியை தனியார் சிலர் அது தமது காணி எனத்தெரிவித்து குளத்துடன் இணைத்து வீதியையும் மறித்து வேலியையும் அடைத்துள்ளனர்.

குறிப்பாக தனியார் காணி உரிமையாளர்கள், வீதியை மறித்தும் குளத்தின் ஒருபகுதியை இணைத்தும் தமது எல்லையை வரையறுத்துள்ளனர்.

இதன்காரணமாக சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வீதியானது சாவகச்சேரி பிரதேச சபை வீதி வரைபடத்தில் குறியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jaffna Protest 01

இதனையடுத்து வீதிக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி அப்பகுதிவாசிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...