norochchola power
செய்திகள்அரசியல்இலங்கை

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி விவகாரம் – மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Share

” கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஆரம்பக்கட்ட உடன்படிக்கை மட்டுமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்னும் இரு உடன்படிக்கைகள் உள்ளன. அந்த உடன்படிக்கைகளே முக்கியமானவை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசுகர தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற பங்காளிக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் பற்றி விவரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” உரப்பிரச்சினை, யுகதனவி விவகாரம், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட பல விடயங்கள் தொடர்பில் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியமை தொடர்பில் எமது நிலைப்பாட்டை அறிவித்தோம். அதன்போது ஆரம்பக்கட்ட உடன்படிக்கையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இன்னும் 2 உடன்படிக்கைகள் உள்ளன. அவையே முக்கியமானவை. எனவே, தேவையான யோசனைகளை முன்வைக்குமாறு நிதி அமைச்சர் எமக்கு தெரியப்படுத்தினார்.” – என்றார் தயாசிறி ஜயசேகர.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...