காரைநகர் பிரதேச சபைக்கு 10இல் புதிய தவிசாளர் தெரிவு
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் காரைநகர் பிரதேச சபை பாதீடு தோல்வி!!

Share

காரைநகர் பிரதேச சபையின் பாதீடு ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது.

காரைநகர் தவிசாளர் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் இயற்கை எய்தியமையிட்டு புதிய தவிசாளராக சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த மயிலன் அப்புத்துரை தெரிவுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் சமர்ப்பித்த  முதலாவது வரவுசெலவுத்திட்டம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று (21) இரண்டாவது பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஈபிடிபி உறுப்பினர்களுக்கும் இடையில் காராசார விவாதம் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

பாதீட்டிற்கு ஆதராவாக ஈ.பி.டி.பி 2 அங்கத்தவரும் சுயேட்சைக்குழுவைச்சேர்ந்த 3 வாக்களித்திருந்தனர். எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த 3 அங்கத்தவரும் ஐக்கிய தேசியகட்சியை சேர்ந்த 2வரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒருவரும் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து ஒருவாக்கால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இதனையடுத்து தவிசாளர் பதவியிழந்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...