tamilnaadi 101 scaled
இந்தியாசெய்திகள்

2000 கோடி போதைப்பொருள் கடத்தல்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது

Share

2000 கோடி போதைப்பொருள் கடத்தல்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு டெல்லியில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுப் படையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அதேபோன்ற மற்றொரு சம்பவம் நடைபெற இருப்பதாக தெரிய வந்ததால், அதிரடி சோதனை நடத்தப்பட்டபோது பசாய் தாராப்பூர் பகுதியில், கிடங்கு ஒன்றில் சந்தேகத்திற்குரிய கும்பலை அதிகாரிகள் விசாரித்தனர்.

அவர்கள் போதைப்பொருளை சத்துமாவில் கலந்து கடத்த முயன்றுள்ளனர். உடனே அவர்களை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 50 கிலோ ரசாயன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு அதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், ஜாபர் சாதிக் திரையுலக பிரமுகர்கள், பிரபல நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார்.

Share
தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...