tamilnaadi 102 scaled
உலகம்செய்திகள்

காஸாவில் சோகம்., உதவிக்கு அனுப்பப்பட்ட பாராசூட் செயலிழந்து ஐவர் பலி

Share

காஸாவில் சோகம்., உதவிக்கு அனுப்பப்பட்ட பாராசூட் செயலிழந்து ஐவர் பலி

காஸாவில் உதவிக்கு அனுப்பப்பட்ட பாராசூட் செயலிழந்து 5 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.

காசா இஸ்ரேலுடனான போரால் பாலஸ்தீனத்தின் காஸாவின் நிலைமை பரிதாபகரமானதாக மாறியுள்ளது.

அங்குள்ள மக்கள் பசியால் கதறி அழுகிறார்கள். மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கின்றனர்.

இதனால் அங்குள்ள மக்களுக்கு உதவ பல நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வருகின்றன.

காஸாவில் விமானங்கள் மூலம் உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

ஆனால, அண்மையில் காஸாவில் உதவி வழங்கும் போது சோகம் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை, வடக்கு காசாவில் உள்ள அகதிகள் முகாமுக்கு பாராசூட் மூலம் உணவுப் பொதி அனுப்பப்பட்டது. அது உணவுக்காகக் காத்திருந்த மக்கள் மீது திறக்கப்படாமல் விழுந்தது.

இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவசர அறையின் தலைமை செவிலியர் முகமது அல்-ஷேக் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...