Lohan Ratwatte
செய்திகள்இலங்கை

லொஹானுடன் அழகு ராணி சிறைக்கு சென்றமை உண்மையே!!

Share

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன், இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றார் என கூறப்படும் தகவல் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா, தான் ரத்வத்தையுடன் சென்றேன் என தெரிவிக்கப்படும் தகவலில் உண்மை இல்லை எனவும், குறித்த குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றமை உண்மையென கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

லொஹான் ரத்வத்தையுடன் திருமதி புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலையைப் பார்க்கச் சென்றார். இதில் சந்தேகமில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

லொஹான் ரத்வத்தையுடன், வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற குழுவில் அழகு ராணி ஒருவரும் இருந்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, “நான் அங்கு செல்லவில்லை. அந்தக் கதைகள் பொய்யானவை” என புஷ்பிகா டி சில்வா தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தான் பெண்ணுடன் வெலிக்கடை சிறைக்கு சென்றேன் என வெளியாகும் தகவலில் உண்மையில்லை என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...