Climate change
செய்திகள்இந்தியா

ஏற்றுக்கொள்ளப்பட்டதா இந்தியாவின் யோசனை?

Share

ஐ.நாவின் மாநாட்டில் காலநிலை தொடர்பான இந்தியாவின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான படிம எரிபொருள் பயன்பாட்டின் குறைப்பு தொடர்பாக இந்தியாவால் முன்வைக்கப்பட்ட கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் கருத்து தெரிவிக்கையில்,

”காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர் படிம எரிபொருளின் பயன்பாட்டினால் தான் உலகின் சில நாடுகள் பொருளாதாரத்திலும், நல்வாழ்விலும் மேன்மை பெற்றுள்ளன எனவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதற்குரிய துறையை மட்டும் குறை சொல்லவது நியாயமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு சர்வதேச நாடுகள் தனது சூழல், வலிமை, பலவீனம் ஆகியவற்றின் அடிப்படையில் கரியமில வாயு வெளியேற்றத்தையும் சுத்திகரிப்பையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டிய கட்டயத்தில் இருக்கின்றோம். .

இவ்வாறு வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், தங்கள் நாட்டில் வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களையும் வகுக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாட்டில் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...