images 15
செய்திகள்இலங்கை

உப குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் சிறப்புப் பரிந்துரை!

Share

அரச சேவையின் மறுசீரமைப்பு, முறையான வேதனைக் கட்டமைப்பை உருவாக்குதல், மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நிறுவுதல் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கை ஒன்று, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை, உப குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி, அண்மையில் பாராளுமன்றத்தில் கையளித்தார்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அமைச்சர் சந்தன அபேரத்னவின் தலைமையிலான ஆலோசனைக் குழுவிடம் அறிக்கை கையளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது, ஓய்வூதியம் தொடர்பாக ஒரு முக்கியமான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

அரச சேவையில் பத்து வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிவிட்டு, பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு, அவர்கள் முன்னர் வகித்த பதவிக்குரிய ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து முன்மொழியப்பட்டது.

அரச தொழிலை விட்டுவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் ஒருவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியமும் கிடைக்காத சூழ்நிலை உள்ளதால், இது குறித்துக் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...