Bribery Commission
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய இழப்பீடு மோசடி: ₹100 கோடிக்கும் அதிகமான இழப்பீடு பெற்ற 42 முன்னாள் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்ட நடவடிக்கை!

Share

அரகலய போராட்டத்தின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 100 கோடிக்கும் அதிகமான இழப்பீடு பெற்றதாகக் கூறப்படும் 42 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி) மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் தயாராகியுள்ளது.

பொது மக்கள் நிதி மற்றும் பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததற்காக, இந்த முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்களான நிமல் லான்சா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்திக்க அனுருத்த, மிலன் ஜயதிலக்க, பிரசன்ன ரணவீர, துமிந்த திசாநாயக்க, கனக ஹேரத், அருந்திக பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி ரஹீம், கோகிலா குணவர்தன, சிறிபால கம்லத், டபிள்யூ.டி.வீரசிங்க, டி.பி.ஹேரத், ரமேஷ் பத்திரன, விமலவீர திசாநாயக்க, கீதா குமாரசிங்க, சம்பத் அத்துகோரல, ஜயந்த கெட்டகொட, விமல் வீரவன்ச, கபில நுவன் அதுகோரல, சீதா அரம்பேப்பொல, சஹான் பிரதீப், ஜனக பண்டார தென்னகோன், ரோஹித அபேகுணவர்தன, அசோக பிரியந்த, சந்திம வீரக்கொடி, அகில எல்லாவல, சன்ன ஜயசுமன, பியங்கர ஜயரத்ன, ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி, சமன்பிரியா ஹேரத், ஷெஹான் சேமசிங்க, பிரேமநாத் சி. தொலவத்த, குணபால ரட்ணசேகர, கெஹெலிய ரம்புக்வெல்ல, சாந்த பண்டார மற்றும் காலஞ்சென்ற காமினி லொக்குகே மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் உள்ளடங்கலாக 42 பேர் தொடர்பாக தயாரிக்கப்பட்ட தனித்தனி விசாரணை கோப்புகள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், இது தொடர்புடைய விசாரணைக் கோப்புகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகள் நீதிமன்றங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...