24 6656b4127808c 1
இந்தியாசெய்திகள்

இந்தியாவுடனான லாகூர் பிரகடனம் தொடர்பில் பாகிஸ்தான் தகவல்

Share

இந்தியாவுடனான லாகூர் பிரகடனம் தொடர்பில் பாகிஸ்தான் தகவல்

இந்தியாவுடன் 1999ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட லாகூர் பிரகடனத்தை தமது நாடு மீறியதை பாகிஸ்தானிய (Pakistan) முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் (Nawaz Sharif) ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த சமாதான ஒப்பந்தத்தில் செரீப்பும் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிஹரிபாயும் ( Atal Bihari) கையெழுத்திட்டுள்ளதோடு முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பெர்வேஸ் முசாரப்பால் ஆரம்பிக்கப்பட்ட கார்கில் மோதலுக்கு தமது தவறே காரணம் என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.

1998ஆம் ஆண்டு மே 28ஆம் திகதியன்று, பாகிஸ்தான் ஐந்து அணு சோதனைகளை நடத்தியுள்ளது.இதைத் தொடர்ந்து, வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது இரண்டு தலைவர்களும் 1999 பெப்ரவரி 21ஆம் திகதி லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிப்பதையும், மக்களிடமிருந்து தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனினும் பாக்கிஸ்தானியப் படைகள் ஜம்மு மற்றும் காஸ்மீரில் கார்கில் மாவட்டத்தில் ஊடுருவியதால், 1999 மார்ச்சில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஆரம்பமானது.இதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை பாகிஸ்தான் நடத்திய முதல் அணுசக்தி சோதனையின் 26ஆவது ஆண்டு நிறைவைக் குறித்த கருத்துரைத்துள்ள நவாஸ் செரீப், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் அணுசக்தி சோதனைகளைத் தடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்தார்.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ள தாம் மறுத்து விட்டதாகவும் நவாஸ் செரீப் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...