aq scaled
செய்திகள்விளையாட்டு

சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று இந்திய இளம் பெண் சாதனை!

Share

பெருவில் இடம்பெற்று வரும் ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில், 14 வயதுடைய இளம் இந்தியப் பெண், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பெரு நாட்டின் தலைநகரான லிமாவில், ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி இடம்பெற்று வருகிறது.இந்தப் போட்டித் தொடரில், இந்தியா 8 தங்கப் பதக்கம் உள்ளடங்கலாக 17 பதக்கங்களுடன் முன்னிலையில் இருந்து வருகிறது. அமெரிக்கா இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 25 மீற்றர் பிஸ்டல் பிரிவில், 14 வயதுடைய இந்தியாவின் இளம் வீராங்கனை ஒருவர் தங்கப் பதக்கம் பெற்றுக்கொண்டுள்ளார்.

நம்யா கபூர் என்ற இளம் பெண் வீராங்கனையே இவ்வாறு தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்டு இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நம்யா கபூர் பெற்றுள்ளார்.

இதேவேளை,  இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர், குறித்த போட்டியில் வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...