குடியிருப்புக் கட்ட‌டம் இடிந்து வீழ்ந்து 24 வீடுகள் தரைமட்டமாகிய சோகம்!

Chennai building collapsed

சென்னை- திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்ட‌டம் இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் 24 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

இன்று (27) காலையில் கட்டடத்தில் அதிர்வு இருந்ததால் மக்கள் வெளியேறிய நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த டி பிளாக்கில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து, தீயணைப்புப் படை வீரர்கள் தேடி வருகிறார்கள்.

மேலும் இடிபாடுகளை அகற்றும் பணியானதும் முன்னெடுக்கப்படுகிறது.

Exit mobile version