கடத்த முயன்ற ஆமைகள் மீட்பு!!!

Turtle

61 ஆமைகளைக் கடத்துவதற்கு முற்பட்ட நிலையில், 61 ஆமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

பீகாரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கயா ரயில் நிலையத்திற்கு வரும் ரிஷிகேஷ் ஹவுரா யாக் நகரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆமைகள் கடத்தப்படவுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, நடாத்தப்பட்ட சோதனையில் 3 பைகளில் 61 ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

#IndiaNews

Exit mobile version