Egg 1
இந்தியாசெய்திகள்

சத்துணவில் பழுதடைந்த முட்டைகள்!!

Share

இந்தியா- தமிழகத்தில் பாடசாலையில் வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த நாகனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பாடசாலையில், மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனுடைய அடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்குள்ள உணவுப் பொருட்கள் மற்றும் இருப்பு உள்ள முட்டைகளின் தரம் ஆகியவை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து உணவுப் பொருட்களும் நல்ல நிலையில் உள்ளது என்றும், முட்டைகள் தண்ணீரில் இட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் அவை அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் கடந்த வாரம் வாங்கப்பட்ட முட்டைகளை உரிய காலத்தில் அளிக்காமல், பழுதடைந்த முட்டைகளை பாடசாலையில் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து பாடசாலையின் சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, சமையல் பணியாளர் இலட்சுமி மற்றும் பாடசாலைத் தலைமை ஆசிரியை தனலட்சுமி ஆகியோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 8
இந்தியாசெய்திகள்

நேரில் சென்ற விஜய்.. போலிஸ் அடித்து கொன்ற அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல், நிதி உதவி

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் இருக்கும் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை...

6 17
இந்தியாசெய்திகள்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில்...

23 3
இந்தியாசெய்திகள்

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம்

ஏசி வேலை செய்யவில்லை அல்லது ரயில் தாமதமாக வந்தால், முழு டிக்கெட் பணத்தையும் திரும்பப் பெறுவது...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...