curfew
இந்தியாசெய்திகள்

ஒமைக்ரோன் எதிரொலி: ஊரடங்கு அறிவிப்பு

Share

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவினை மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரோன் வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில் இன்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், நிபுணர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது கொரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கொரோனா பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் எதிர்வரும் 28 ஆம் திகதியில் இருந்து 10 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து எதிர்வரும் 28 ஆம் திகதி இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

கர்நாடக அரசின் இந்த உத்தரவு காரணமாக பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 22 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் ஏதிலிகளுக்குத் தனித்துவமான கொள்கை அவசியம்: ‘தி ஹிந்து’ செய்தி முக்கியத்துவம்!

தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்,...

250126fisherman342
செய்திகள்இந்தியா

நெடுந்தீவில் கைதான 3 இந்திய மீனவர்களுக்கும் ஜனவரி 7 வரை விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 இந்திய...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

IMG 9868 3 6 2022 14 5 5 4 1 CDBK64AO
இந்தியாசெய்திகள்

ஒற்றையாட்சி முறை மீண்டும் ஈழப் போராட்டத்திற்கு வழிவகுக்கும் – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

இலங்கையில் ஒற்றையாட்சி முறையைத் திணிக்க எடுக்கும் முயற்சிகள், அடக்கப்பட்ட நிலையில் உள்ள தமிழ் ஈழ விடுதலைப்...