USA 1
செய்திகள்உலகம்

இந்திய பாகிஸ்தான் எல்லைகள் ஆபத்தானவை -அமெரிக்கா

Share

இந்திய பாகிஸ்தான் எல்லைகள் ஆபத்தானவை என அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு எச்சரித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்கும் படி தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில் இந்தியாவுக்கு இரண்டாம் நிலையும், பாகிஸ்தானுக்கு மூன்றாவது நிலையும் எச்சரிக்கையாக இருக்கிறதென அந்நாட்டு தெரிவித்துள்ளது.

இது தொடா்பில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் ,

‘பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபா் ஆகிய மாகாணங்களுக்கும், பழங்குடியினா் பகுதிகளுக்கும் செல்வதைத் முற்றாக தவிா்க்க வேண்டும்.

அங்கு தீவிரவாதம், ஆள்கடத்தல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் தீவிரவாதத்தால் எந்நேரமும் ஆயுத மோதல் ஏற்படலாம்.

அத்தோடு தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் தொடா்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன எனவும் அப்பாவி மக்கள், இராணுவத்தினா், பொலிஸார் மீது உள்ளூா் கிளா்ச்சியாளா் குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றன.

அமெரிக்க அதிகாரிகள்மற்றும் பயணிகள் மீது முன்பும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

2014 முதல் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையால் நிலைமை சற்று மேம்பட்டுள்ளது.

குறிப்பாக இஸ்லாமாபாதில் தீவிரவாத அச்சுறுத்தல் குறைவாக உள்ளதால் அங்கு தாக்குதல்களும் குறைந்துள்ளன’ என்று தெரிவித்துள்ளது.

இது போன்று ‘இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம், உள்ளூா் அமைதியற்ற நிலை நிலவுவதாலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 10 கி.மீ.க்குள் ஆயுத மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் அங்கு பயணம் மேற்கொள்வதை முற்றாக தவிா்க்க வேண்டும்.

அத்தோடு இந்தியாவில் பாலியல் வன்கொடுமை, குற்றச் சம்பவங்கள் சுற்றுலாப் பகுதிகளில் நடைபெறுவது அதிகரித்து வருவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கிழக்கு மகாராஷ்டிரம், வடக்கு தெலங்கானா, மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதி ஆகியவற்றில் அவசர சேவைகள்தங்களால் வழங்க முடியாதுள்ளதாகவும் உள்ளது.

ஆகையால் இவ் இரு நாடுகளுக்கும் தன்னுடைய மக்கள் செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...