mani
செய்திகள்இலங்கை

உரிமைகளை வென்றெடுக்க பாரததேசம் துணை நிற்கவேண்டும் – மேயர் மணிவண்ணன் தெரிவிப்பு

Share

“தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க பாரத தேசம் எமக்குத் துணை நிற்கவேண்டும். எமது தந்தை நாடு என்ற அடிப்படையில் அது நமக்குத் துணை நிற்கவேண்டும் என்ற கோரிக்கையை நான் விடுகின்றேன்.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 90 ஆவது பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாங்கள் ஒருபோதும் பாரத தேசத்தின் நலன்களுக்கு முரணாக செயற்படப் போவதில்லை. நாங்கள் பாரத தேசத்தின் உறவுகளாக, தொப்புள்கொடி உறவுகளாக, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களின் பொருளாதாரத்தை – அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தகூடிய ஒரு தரப்பாக இந்தத் தேசத்தில் இருப்போம்.

எம்மைப் பொறுத்தவரை பாரத தேசம் என்பது எமது தந்தையர் நாடு. நாம் தந்தையர் நாடான பாரத தேசத்தை பின்பற்றி செயற்படுகின்றோம்.

தென்னிந்தியா என்பது எமது தொப்புள் கொடி உறவுகள் வாழ்கின்ற இடமாகும். ஆகவே, பண்பாட்டு ரீதியாகவும் பாரத தேசத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். எங்கள் அரசியல் கலாசாரத்திலும் பாரத தேசத்தின் அரசியல் கலாசாரத்தை பின்பற்றுகின்றோம்.

பாரத தேசத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை பின்பற்றுகின்றவர்களை நினைவுகூருவதைப் போல் இங்கேயும் நாம் அவர்களை நினைவுகூரும் பண்பாட்டை பின்பற்றி வருகின்றோம்.

குறிப்பாக இன்றைய விஜயதசமி நாளில் – அப்துல்கலாமின் நினைவு தினத்தில் பாரத தேசத்துக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். எமது நீண்டகால உரிமைக் கோரிக்கைக்கு பாரத தேசம் செவிசாய்க்க வேண்டும்.

நாம் தென்னிலங்கையில் இருக்கும் சிங்கள மக்களுக்கும் எதிரானவர்கள் அல்லர். நாங்கள் மற்றைய இனத்தை அழிப்பதற்காக எமது உரிமையைக் கோரவில்லை. நாங்கள் எம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக – எம்மை வளர்த்துக்கொள்வதற்காக எமக்கு உரிமை வேண்டும் என கடந்த 60 வருடங்களாகப் போராடி வருகின்றோம்.

அந்தவகையில் பாரத தேசம் எமது கோரிக்கையை நியாயமாகப் புரிந்து எமது கோரிக்கைகளை அடைவதற்கு அழுத்தங்களையும் ஒத்துழைப்புகளையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணன், யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் பிரதம நூலகர் மற்றும் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...