olympics
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் முயற்சியில் இந்தியா!

Share

2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடாத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவது தொடர்பில்
தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச ரீதியில் மிகவும் பிரபலமான போட்டியாக ஒலிம்பிக் போட்டியுள்ளது.

ஒலிம்பிக் போட்டியை இந்தியா இதுவரை நடத்தியதில்லை.

ஆனால் ஒலிம்பிக் போட்டியை நடாத்திய நாடு என்ற பெருமையைப் பெற்றுக்கொள்வதற்காக, இந்தியா பல முறை முயற்சிகளை
மேற்கொண்டு தோல்வி கண்டது.

இந்நிலையில், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடாத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா நேற்று வழங்கிய நேர்காணலொன்றில் இவ்வாறு
கூறியுள்ளார்.

‘2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால் ஆரம்ப விழாவை எங்கு நடத்துவீர்கள் என்று கேட்டால் நிச்சயம்

அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை நோக்கி தான் கையை நீட்டுவேன்.

இந்தியாவில் ஒலிம்பிக் ஆரம்ப விழாவுக்கு இதை விட பொருத்தமான இடம் இருக்க முடியாது.

தொடக்க விழா நடக்கும் ஸ்டேடியத்தில் தான் தடகள போட்டிகளும் நடைபெறும்.

அதற்கும் சரியான இடமாக இது இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...