olympics
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் முயற்சியில் இந்தியா!

Share

2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடாத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவது தொடர்பில்
தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச ரீதியில் மிகவும் பிரபலமான போட்டியாக ஒலிம்பிக் போட்டியுள்ளது.

ஒலிம்பிக் போட்டியை இந்தியா இதுவரை நடத்தியதில்லை.

ஆனால் ஒலிம்பிக் போட்டியை நடாத்திய நாடு என்ற பெருமையைப் பெற்றுக்கொள்வதற்காக, இந்தியா பல முறை முயற்சிகளை
மேற்கொண்டு தோல்வி கண்டது.

இந்நிலையில், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடாத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா நேற்று வழங்கிய நேர்காணலொன்றில் இவ்வாறு
கூறியுள்ளார்.

‘2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால் ஆரம்ப விழாவை எங்கு நடத்துவீர்கள் என்று கேட்டால் நிச்சயம்

அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை நோக்கி தான் கையை நீட்டுவேன்.

இந்தியாவில் ஒலிம்பிக் ஆரம்ப விழாவுக்கு இதை விட பொருத்தமான இடம் இருக்க முடியாது.

தொடக்க விழா நடக்கும் ஸ்டேடியத்தில் தான் தடகள போட்டிகளும் நடைபெறும்.

அதற்கும் சரியான இடமாக இது இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...