in
செய்திகள்விளையாட்டு

IPL வீரர்களை கொண்டு களமிறங்குகிறது இந்தியா

Share

புதிய பயிற்றுவிப்பாளர்,புதிய தலைவர் மற்றும் IPL ல் சாதித்த வீரர்களை கொண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா களமிறங்ககுகிறது .

நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

T 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட T 20 தொடரில் பங்கேற்கிறது. கார்த்திகை 17-ம் திகதி தொடங்கவுள்ள இந்த தொடர் கார்த்திகை 21-ம் திகதி நிறைவடைகிறது.

இதற்கான 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, புதிய அணி தலைவராக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராகக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய பயிற்றுவிப்பாளராக ராகுல் ராவிட் செயல்படுவர் எனவும் ICC அறிவித்துள்ளது.

இந்திய அணியின் விபரங்கள் :

ரோஹித் சர்மா (தலைவர்), கேஎல் ராகுல் (துணை தலைவர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர்,சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (பந்து காப்பாளர் ), இஷான் கிஷன் (பந்து காப்பாளர் ), யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....