mano ganesan
செய்திகள்இலங்கை

ஆழமுடியாவிட்டால் சென்று விடுங்கள் – அரசுக்கு மனோ அறிவுரை!

Share

“ஆளமுடியாவிட்டால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாவிட்டால் போய் விடுங்கள். ஆள வேண்டியவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு, அறிவுறுத்துகின்றார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டில் இன்று பொருட்களின் விலை விண்ணைத்தொட்டுள்ளது. தேநீராக இருக்கலாம், பனிஸாக இருக்கலாம், சோற்று பார்சலாக இருக்கலாம் சாதாரண மக்களுக்குரிய அனைத்து பொருட்களின் விலைகளுமே அதிகரித்து வருகின்றன. பாதீடு மூலமாக சரியான தீர்வை இந்த அரசாங்கம் முன்வைக்கும் என்கின்றனர். நம்பவே முடியாது.

நாட்டை நிர்வகிக்க முடியவில்லை என்றால், பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், ஆளமுடியவில்லை என்றால், போய்விடுங்கள். சரியானவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.” – என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....