strike
செய்திகள்இலங்கை

போராட்டம் தொடரும்! – அரச தாதியர் சங்கம்

Share

தமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் முழுமையான போராட்டத்தில் குதிப்போம் என அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திடம் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் முற்று முழுதான போராட்டத்தில் குதிப்போம் என, அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் யாழ். போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இன்று காலை 07 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில், அரச தாதியர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பகுதி நேர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...