stikecvcv
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பளம் அதிகரிக்காவிடின் போராட்டத்தில் இறங்குவோம் – அரச ஊழியர்கள் போர்க்கொடி

Share

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாததால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிடின் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை அரச உத்தியோகபூர்வ தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு 18 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அல்லது மேலதிக கொடுப்பனவு வழங்கல் வேண்டும்.

இரண்டு வார காலத்துக்குள் தீர்வு இல்லாது விடின் முன்னறிவித்தல் இன்றி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு வரவு– செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கப்பட்டுள்ளார்.

இதனால் 1.5 மில்லியன் அரச ஊழியர்களும் அவர்களை சார்ந்துள்ள 6 மில்லியனுக்கும் அதிகமானோர் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகவேண்டியுள்ளது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 4 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் செலவாக 58 ஆயிரம் காணப்படுகிறது.

தற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எனவே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எதிர்வரும் வாரத்துள் கவனம் செலுத்தாவிடின் எந்தவித முன்னறிவித்தலுமின்றி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட நேருமென அவர்கள் அறிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...