kumara 1
செய்திகள்இலங்கை

மாகாண தேர்தலை நடத்தினால் பொலிஸ், காணி அதிகாரத்தையும் வழங்க நேரிடும்!

Share

“மாகாண சபை என்பது வெள்ளை யானை. இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்ட அந்த முறைமை எமது நாட்டுக்கு தேவையில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இன்னும் பலரும் கதைக்கின்றனர். அத்தகையதொரு தேர்தல் எமது நாட்டுக்கு அவசியமில்லை. மாகாணசபை என்பது வெள்ளை யானை. அரசியல் வாதிகளை குஷிப்படுத்துவதற்காகவே தேர்தல் நடத்தப்படுகின்றது. அதன்மூலம் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை.

மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்பதால் தற்போது மாகாணசபை இயங்கவில்லையா ? ஆளுநரின்கீழ் நிர்வாகம் நடக்கின்றது. ஜனாதிபதியின் பிரதிநிதியே அவர். மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் மாகாணசபைக்கான செலவு குறைவடைந்துள்ளது. நாட்டுக்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாகாணசபை முறைமை எமக்கு அவசியமில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும்.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் பொலிஸ், காணி அதிகாரங்களையும் பகிரவேண்டும். தொடர்ந்தும் அவற்றை ஒளித்து வைத்திருக்கமுடியாது.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...