watermark 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ் இந்து ஆலய விக்கிரகங்கள் கொழும்பு பகுதியில் மீட்பு!

Share

கடந்த 9 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பல இந்து ஆலய விக்கிரகங்கள் காணாமல் போயுள்ளன. குறித்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணாமல் போன விக்கிரகங்கள் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணுவ மற்றும் கடற்படையினரின் பாதுகாப்பில் இருந்த இந்து ஆலயங்களில் இருந்து திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட பல விக்கிரகங்கள் கொழும்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த விக்கிரகங்கள் திருட்டு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து விக்கிரகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர்கள் காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதோடு, குறித்த நபர்களின் தொலைபேசிகளில் காணாமல் போயுள்ள விக்கிரகங்களின் புகைப்படங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் காணாமல் போயுள்ள 2 விக்கிரகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு 20 இற்கு மேற்பட்ட விக்கிரகங்கள் சம்பவ இடத்தில் மீட்கப்பட்டுள்ளதோடு, கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

மீட்கப்பட்ட விக்கிரகங்கள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளன.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...