Raja Kollure
செய்திகள்அரசியல்இலங்கை

கட்சியிலிருந்து விலகமாட்டேன்! – ஆளுநர் ராஜா கொல்லுரே

Share

” இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நான் விலகமாட்டேன். மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று வடமேல் மாகாணத்தின் ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று அறிவித்தார்.

அதிபர் – ஆசிரியர்களின் போராட்டத்தை விமர்சித்திருந்த ராஜா கொல்லுரே, போராட்டம் தொடர்ந்தால் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும் என அறிவிப்பு விடுத்திருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்தன. கம்யூனிஸ்ட் கட்சியே போர்க்கொடி தூக்கியது.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசெயற்குழு இன்று கூடியது. இதன்போது தவிசாளர் பதவியில் இருந்து ராஜா கொல்லுரேவை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் இந்த முடிவு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ராஜா கொல்லுரே,

” நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய சிலர் இன்னும் கட்சிக்குள் இருக்கின்றனர். அவர்களின் தேவைக்கேற்பவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். கட்சியில் இருந்து நான் விலகமாட்டேன்.” -என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...