BANDU
செய்திகள்இலங்கை

ஒரு பில்லியன் இழப்பீடு கோருவேன்! – பந்துல

Share

தனது பெயருக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோருவேன்.

இவ்வாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் தனக்கு தொடர்பு இருக்கிறது என நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கும் தயார்.

வெள்ளைப்பூண்டு கொள்வனவு மற்றும் விநியோக நடவடிக்கையில் மோசடி இடம்பெற்றுள்ளது என முன்னாள் நுகர்வோர் விவசாய அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் துஷான் குணவர்த்தன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான குற்றச்சாட்டானது எனது அரசியல் செல்வாக்கை சரிய செய்ய மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி.

நான் ஊழல் மோசடியில் ஈடுபடுகின்ற அரசியல்வாதி கிடையாது. இது தொடர்பில் அரச தரப்பினர் எனக்கு தொடர்பிருக்கிறது என்பதை நிரூபித்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மட்டுமல்லாது இலங்கை அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவேன் – என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...