BANDU
செய்திகள்இலங்கை

ஒரு பில்லியன் இழப்பீடு கோருவேன்! – பந்துல

Share

தனது பெயருக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோருவேன்.

இவ்வாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் தனக்கு தொடர்பு இருக்கிறது என நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கும் தயார்.

வெள்ளைப்பூண்டு கொள்வனவு மற்றும் விநியோக நடவடிக்கையில் மோசடி இடம்பெற்றுள்ளது என முன்னாள் நுகர்வோர் விவசாய அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் துஷான் குணவர்த்தன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான குற்றச்சாட்டானது எனது அரசியல் செல்வாக்கை சரிய செய்ய மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி.

நான் ஊழல் மோசடியில் ஈடுபடுகின்ற அரசியல்வாதி கிடையாது. இது தொடர்பில் அரச தரப்பினர் எனக்கு தொடர்பிருக்கிறது என்பதை நிரூபித்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மட்டுமல்லாது இலங்கை அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவேன் – என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...