BANDU
செய்திகள்இலங்கை

ஒரு பில்லியன் இழப்பீடு கோருவேன்! – பந்துல

Share

தனது பெயருக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோருவேன்.

இவ்வாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் தனக்கு தொடர்பு இருக்கிறது என நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கும் தயார்.

வெள்ளைப்பூண்டு கொள்வனவு மற்றும் விநியோக நடவடிக்கையில் மோசடி இடம்பெற்றுள்ளது என முன்னாள் நுகர்வோர் விவசாய அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் துஷான் குணவர்த்தன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான குற்றச்சாட்டானது எனது அரசியல் செல்வாக்கை சரிய செய்ய மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி.

நான் ஊழல் மோசடியில் ஈடுபடுகின்ற அரசியல்வாதி கிடையாது. இது தொடர்பில் அரச தரப்பினர் எனக்கு தொடர்பிருக்கிறது என்பதை நிரூபித்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மட்டுமல்லாது இலங்கை அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவேன் – என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...