chennai 2
செய்திகள்இந்தியா

கல்லூரிகளுக்கு விடுமுறையளித்த கனமழை

Share

இந்தியா தமிழகத்தில், தொடர்ந்து பெய்த கடும் மழையால், பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியா தமிழகத்தில் கடும் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து 4 நாட்களுக்குக் கடும் மழை தொடரும் என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ள நிலையில், நாளை தமிழகத்தில் சில மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழக மாநிலத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், தேனி மாவட்டங்களில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மதுரை, இராமநாதபுரம், திருவாரூரில் பாடசாலைகளுக்கு மாத்திரம் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று மதியமளவிலேயே, பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 13
உலகம்செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிய இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பான பயணம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பினருக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில்,...

p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...